261797583 10228737010635558 2823760125332662289 n
செய்திகள்அரசியல்இலங்கை

மலையக அரசியல் அரங்கம் ஆரம்பம்!

Share

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான  மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது .

உதயமாகியுள்ள இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமை சார்’ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான மயில்வாகனம் திலகராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  மயில்வாகனம் திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த அமைப்பானது அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ அல்லாது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு  என்பதால் அதில் எவரும் இணையலாம்.

புதிய அரசியலமைப்புக்கான பணிகள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் ‘அரசியல் சார்’ கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு இவ்வாறானதொரு அமைப்பின்  தேவைப்பாட்டை உணர்ந்தே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன்  ‘மாவட்ட எல்லைகளை கடந்த மலையக அரசியல்’ என்ற எண்ணக்கரு பிரதான செயற்பாட்டுத் தளமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மலையகத்தின்  பிரதிநிதித்துவ அரசியல் 1921 ல் இருந்தே ஆரம்பித்த  நூற்றாண்டு பழமை வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைகின்றது” என அமைப்பு குறித்து  விளக்கமளித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...