261797583 10228737010635558 2823760125332662289 n
செய்திகள்அரசியல்இலங்கை

மலையக அரசியல் அரங்கம் ஆரம்பம்!

Share

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான  மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது .

உதயமாகியுள்ள இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமை சார்’ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான மயில்வாகனம் திலகராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  மயில்வாகனம் திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குறித்த அமைப்பானது அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ அல்லாது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு  என்பதால் அதில் எவரும் இணையலாம்.

புதிய அரசியலமைப்புக்கான பணிகள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் ‘அரசியல் சார்’ கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு இவ்வாறானதொரு அமைப்பின்  தேவைப்பாட்டை உணர்ந்தே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன்  ‘மாவட்ட எல்லைகளை கடந்த மலையக அரசியல்’ என்ற எண்ணக்கரு பிரதான செயற்பாட்டுத் தளமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மலையகத்தின்  பிரதிநிதித்துவ அரசியல் 1921 ல் இருந்தே ஆரம்பித்த  நூற்றாண்டு பழமை வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அமைகின்றது” என அமைப்பு குறித்து  விளக்கமளித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...