Malaiyagam
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

200 வருடங்களாக காணி உரிமையின்றி வாழும் மலையக மக்கள்!

Share

200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” காடாக இருந்த மலைநாட்டை மலையக மக்கள் வளமாக்கினர். இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்தனர். 200 வருடங்களாக உழைப்பை வழங்கிவருகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு இன்னும் காணி உரிமை இல்லை.

தற்போது 7 பேர்ச்சஸ் காணியில் வீடுகள் கட்டப்படுகின்றன. அதுவும் பின்னிலையிலேயே இருக்கின்றது.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்துங்கள்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...