Malaiyagam
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

200 வருடங்களாக காணி உரிமையின்றி வாழும் மலையக மக்கள்!

Share

200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது.” -என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” காடாக இருந்த மலைநாட்டை மலையக மக்கள் வளமாக்கினர். இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்தனர். 200 வருடங்களாக உழைப்பை வழங்கிவருகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு இன்னும் காணி உரிமை இல்லை.

தற்போது 7 பேர்ச்சஸ் காணியில் வீடுகள் கட்டப்படுகின்றன. அதுவும் பின்னிலையிலேயே இருக்கின்றது.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்துங்கள்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...