private buses
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

வேலையின்றி தவிக்கப்போகும் பேருந்து நடத்துனர்கள்!!

Share

தனியார் பேருந்துகளில், பேருந்து நடத்துனர் இன்றி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி முதல் இம்முறையானது நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் பேருந்துகளில் கிடைக்கும் பணத்தில் நடத்துனர், மற்றும் சாரதி என இருவருக்கும் ஊதியத்தினை வழங்குவது மிகவும் சிரமமாக இருப்பதால், இம்முறையினை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

இதனை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் முற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி, பேருந்துக் கட்டணங்களை செலுத்தி, சாரதிகள் இல்லாது பேருந்துகளை இயக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இதுகுறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...