செய்திகள்இலங்கை

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

Share

corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!

வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் திடீர் சுகவீனமடைந்ததை அடுத்து, அவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆயினும் வைத்தியசாலை கொண்டுசெல்ல முன்னரே அவர் உயிரிந்துள்ளார்.

அதன்பின்னர் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகவீனம் காரணமாக வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த 55 வயது நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்ப்பபட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...