diana gamage
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதிக்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள்! – கோருகிறார் டயானா கமகே

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள் நாட்டை  ஆட்சிசெய்வதற்கு  வழங்குவதாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் 19  வைரஸ் தொற்று காரணமாக இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். அதேநேரம், பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலதாமதம் ஏற்பட்டிருந்தால் இந்த இரண்டு வருடங்களில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் கட்டி முடிக்க முடியும். இந்த நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் ராஜபக்ஷக்களால் கட்டப்பட்டவை. நாங்கள் இங்கு இருக்கும் போது ஜனாதிபதி தோல்வியடைவதற்கு இடமளிக்க மாட்டோம்.

கொவிட் 19 நெருக்கடியால் உலகம் முழுவதும் சிக்கலில் உள்ளது, இன்று இங்கிலாந்தில் வரிசைகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...