கோர விபத்தில் வணபிதாவும்
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை விபத்தில் அருட்தந்தை உட்பட இருவர் பலி!!

Share

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில்  அருட்தந்தை மற்றும் வாகன சாரதி ஆகியோர் பலியாகினர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் திருகோணமலை நோக்கி வந்த சொகுசு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமாகினர்.

திருகோணமலை, அன்புவளிபுரம் சகாய மாதா ஆலயத்தின் பங்குத் தந்தை கணேசபிள்ளை நிதிதாசன் (வயது 49) என்பவரும், கார் சாரதியுமே மரணமானார்கள்.

மரணமான பங்குத்தந்தை முன்னர் கிழக்கிலங்கை மனிதாபிமான பொருளாதார அபிவிருத்தி (எஹெட்) நிறுவனத்தின் திருகோணமலைப் பணிப்பாளராகவும் சேவையாற்றியிருந்தார்.

மணல் ஏற்றி வந்த கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...