Train
செய்திகள்இலங்கை

மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த ரயில் சேவைகள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக இடம்பெறவுள்ளன என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரயில் சேவைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வழமையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

130 அலுவலக ரயில்கள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பயணிகள் நெருக்கடியின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில், புதிதாக பல கடுகதி ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...

05 11
செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு: 12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990 ஆக அதிகரிப்பு!

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, மார்ச் 10, 2026 நள்ளிரவு...

02 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 7 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி...

01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...