மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

Train

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த ரயில் சேவைகள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக இடம்பெறவுள்ளன என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரயில் சேவைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வழமையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

130 அலுவலக ரயில்கள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பயணிகள் நெருக்கடியின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில், புதிதாக பல கடுகதி ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் – என்றார்.

Exit mobile version