கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் (வயது-27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
140,60,000 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முற்பட்ட
வேளையிலேயே குறித்த வர்த்தகர் சுங்க பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் தனது கைப்பையில் 10 மில்லியன் பெறுமதியான இலங்கை ரூபா மற்றும் 20,000 பெறுமதியான அமெரிக்க டொலர் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews