pearl one news Kanapathipillai Mahesan
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசாங்க வேலையை நாடுவதாலேயே யாழில் வேலையற்றோர் அதிகம்! – யாழ். அரச அதிபர்

Share

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணைப்பாளர் கருணாகரனின் ஒருங்கிணைப்பில், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற தொழிற்சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் அற்றவர்களுடைய வீதம் சராசரியாக ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது சற்று அதிகமாக காணப்படுகின்றது

யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள் அரசதுறை வேலைவாய்ப்பை நாடுவதன் காரணமாகவே யாழ் மாவட்டத்தில் தொழில்அற்றவர்களுடைய எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்றது.

இதற்கு பிரதானமான காரணம் பாடசாலைகளில் தொழில் வழிகாட்டி செயல் முறைகளை நாம் ஒழுங்காகச் ஏற்படுத்திய போதிலும் அதனை மாணவர்கள் சரியாக பின்பற்றாமையே பிரதானமான காரணமாகும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய நிலையில் 11 வேலை தருணங்களை இங்கு அழைத்திருக்கின்றோம்

175 வேலைவாய்ப்புகள் வெற்றிடமாக காணப்படுவதாக அந்த வேலை வாய்ப்புகளை இங்கு வேலை தேடி வந்து இருப்பவர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், நமது பெற்றோர்கள் மாணவர்களிற்கு கல்வியை போதிப்பது மட்டுமல்லாது உரிய தொழில் வழிகாட்டி தொடர்பிலும் அக்கறையாக செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் எமது மாவட்டத்தில் வேலையற்றோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...