கொரோனா – முல்லையில் இன்று மூவர் சாவு!!
முல்லைத்தீவில் இன்று (25) மூன்று பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றும் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) 54 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இதனை விட முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment