கணபதிப்பிள்ளை மகேசன்
செய்திகள்இலங்கை

யாழில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

யாழ்ப்பாணத்திலும் அண்மைக்காலமாக அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சில கிராம சேவகர் பிரிவுகளை முடக்க வேண்டிய கட்டாயத்துக்குள் யாழ்ப்பாண மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவும் , மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலர் மேலும் கூறினார்.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...