1524736500
செய்திகள்இலங்கை

நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!!

Share

நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!!

அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளையும் மீறி அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இராணுவ ஆட்சியை நாட்டில் நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை அவசர காலச்சட்டத்தை தவிர சாதாரண நடப்புச் சட்டங்களை வைத்தே கட்டுப்படுத்த முடியும்.

சீனி, எரிபொருள், அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களுக்கு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த பொதுவான சட்டங்களே போதுமானவை. இன்று அரசாங்கத்துடன் தொடர்புடைய மற்றும் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும் ஈடுபடுகின்றனர்.

அன்டிஜென் தொடக்கம் அரிசி வரை அரசாங்கத்துடன் தொடர்பிலிருப்பவர்களே இறக்குமதி செய்கின்றனர். நேரடியாகவே அவர்களுக்கு பணிப்புரையை ஜனாதிபதியால் வழங்கமுடியும்.

எனினும் அவசரகால சட்டத்தை கொண்டுவந்து இந்த மோசடிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை காண்பிக்கவே அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...