1524736500
செய்திகள்இலங்கை

நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!!

Share

நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!!

அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளையும் மீறி அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இராணுவ ஆட்சியை நாட்டில் நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை அவசர காலச்சட்டத்தை தவிர சாதாரண நடப்புச் சட்டங்களை வைத்தே கட்டுப்படுத்த முடியும்.

சீனி, எரிபொருள், அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களுக்கு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்த பொதுவான சட்டங்களே போதுமானவை. இன்று அரசாங்கத்துடன் தொடர்புடைய மற்றும் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும் ஈடுபடுகின்றனர்.

அன்டிஜென் தொடக்கம் அரிசி வரை அரசாங்கத்துடன் தொடர்பிலிருப்பவர்களே இறக்குமதி செய்கின்றனர். நேரடியாகவே அவர்களுக்கு பணிப்புரையை ஜனாதிபதியால் வழங்கமுடியும்.

எனினும் அவசரகால சட்டத்தை கொண்டுவந்து இந்த மோசடிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை காண்பிக்கவே அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...