e77a2485 d1eb 45fb b8f1 8476b19430a7
செய்திகள்இலங்கை

மாதா கோயிலில் திருடர்கள் கைவரிசை!- கரவெட்டியில் சம்பவம்!

Share

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு சி.சி.ரி.வி கமராவுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் திருடர்கள் கோவிலுக்குள் புகுந்துள்ளனர்.

ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்ட ஆலயப் பொருள்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு அதனுள் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன.

அத்துடன், ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட பொருள்களின் விபரம் முழுமையாக தெரியவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது திருட்டு சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...