மாதா கோயிலில் திருடர்கள் கைவரிசை!- கரவெட்டியில் சம்பவம்!

e77a2485 d1eb 45fb b8f1 8476b19430a7

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு சி.சி.ரி.வி கமராவுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் திருடர்கள் கோவிலுக்குள் புகுந்துள்ளனர்.

ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்ட ஆலயப் பொருள்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு அதனுள் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன.

அத்துடன், ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட பொருள்களின் விபரம் முழுமையாக தெரியவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது திருட்டு சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version