ds
செய்திகள்அரசியல்இலங்கை

வர்த்தமானி அடிக்க கூட காகிதம் இல்லை – இலங்கையில் பரிதாபம்!!

Share

அரசாங்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அச்சடிப்பு தாள்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சிலகாலமாக தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைமை திணைக்களத்தின் அச்சு நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக மாறியுள்ளதாக தெரியவருகின்றது.

அரசாங்க அச்சகத் திணைக்கள அதிகாரிகள் கூறும்போது, ஆறு மாதங்களுக்குப் போதுமான அச்சுத் தாள் மட்டுமே உள்ளது.

இது தொடர்பில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் டொலர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அச்சடிக்கும் காகிதம் கிடைக்காவிட்டால், அச்சிடுவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் அச்சடிக்கும் காகிதத்தை பாதுகாப்பாக பயன்படுத்துமாறு அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊழியர்கள் பலர் கொவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் கொவிட் நோயாளர்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#srilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...