modii scaled
செய்திகள்உலகம்

உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியது இந்தியா!

Share

உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை  இந்தியா உருவாக்கியுள்ளது.

இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த டி.என்.ஏ. தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு அதற்கான வளங்களும் வசதிகளும் தம்மிடம் உள்ளன எனவும் உலகிலுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அனைவரும் முன்வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில்,

துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எங்களுடைய ஜனநாயகம் அதன் பன்முகத்தன்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ வளர்ச்சியின் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்கின்றது.

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும். உலகமும் மாறும் கொரோனா காலத்தில் இந்தியா பல சவால்களை சந்தித்துள்ளது. உலகின் பல நாடுகளும் கொரோனா பரவலால் பல இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த அவையில் பெருமையுடன் கூற விரும்புகிறேன். அத்துடன் இந்திய விஞ்ஞானிகள் கொவிட்-19 எதிராக நாசியூடாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்து வருகின்றனர்.

இன்று பிற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாதம் உலகின் முன் அதிகரித்து வருகின்றது.

பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தைத் தாக்குதலை நடத்தவோ பயங்கரவாதத்தை பரப்பவோ பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானிலுள்ள சூழ்நிலையை எந்தவொரு நாடும் அதன் சுயநலத்துக்காக பயன்படுத்த முயற்சிக்கவில்லை எனவும் நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 22
இலங்கைசெய்திகள்

துறைமுக நகருக்கான வரிச்சலுகை: சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம்..!

துறைமுக நகருக்காக வரிச்சலுகைகளை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

21
இலங்கைசெய்திகள்

தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ்...

18 21
இலங்கைசெய்திகள்

பிரபல நடிகையின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதாள உலகத்தினரின் கைகளில் சிக்கியதாகக்...

17 21
இலங்கைசெய்திகள்

கொழும்பில் சூட்சுமமான முறையில் பெருந்தொகை பணத்தை திருடிய பெண்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் காசாளராகப் பணிபுரிந்த பெண், அந்த நிறுவனத்தின்...