6 1 scaled
இந்தியாசெய்திகள்

ரூ.777 கோடியில் உருவான சுரங்கப்பாதை.., பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மூடும் நிலை

Share

ரூ.777 கோடியில் உருவான சுரங்கப்பாதை.., பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மூடும் நிலை

ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை பழுது பார்க்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜுன் மாதம், ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

1.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சாலை, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என உலக தரத்தில் சாலை கட்டப்பட்டது.

இந்நிலையில், மழை நீர் தேங்கியதன் காரணமாக இந்த சுரங்கப்பாதை பலமுறை மூடப்பட்டது. மேலும், மழை நீர் தேங்கியதால் பல நாட்கள் சுரங்கப்பாதை பயன்படுத்தப்படாமே இருந்தது. இதனால், நீர் கசிவு, விரிசல் என பல காரணங்களால் ஆபத்தான சாலையாக மாறியுள்ளது.

இந்த சுரங்க பாதைக்கு ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என கட்டுமான நிறுவனம் கூறிய நிலையில், 2 ஆண்டுகளுக்குள் சேதமடைந்து விட்டது.

இந்த சுரங்கப்பாதையில் டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், “பல சுரங்கப்பாதைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இங்குள்ள கசிவை கட்டுமான நிறுவனம் சரிசெய்யவில்லை.

இதனால், பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்போது முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. பழுது பார்த்தும் பயனிலை” என்றனர்.

இதனைத்தொடர்ந்து சுரங்க பாதையில் கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனத்திற்கு டெல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ” உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பிரகதி மைதான சுரங்கச் சாலை சேதமடைந்துள்ளது. இதற்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறியது.

இதற்கு, அவதூறு கருத்துகளை நிறுவனம் மீது பரப்புவதாக, 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு எல்&டி நிறுவனம் டெல்லி பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...