Ministry of Health 1 scaled
செய்திகள்இலங்கை

பெப்ரவரியில் நிலைமை மோசமாகலாம்! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Share

நாட்டில் கொரோனாத் தொற்றால் சிறுவர்கள் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் விகிதம்
தற்போது அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது தொற்றின் வேகம் வயது வித்தியாசமின்றி பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தோற்றால் சிறுவர்கள் பதிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், பெற்றோர் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்ட 50 க்கும் அதிகமான சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை நாளாந்தம் 10 முதல் 15 சிறுவர்கள் கொரோனாத் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலை அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் மேலும் அதிகரிக்கக்கூடும்.

ஆபத்திலிருந்து தவிர்த்துக்கொள்ள 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இதேவேளை, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவாக பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...