usa 5
செய்திகள்உலகம்

நாடுகளுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் -சீனா

Share

ஜனநாயகம் எனும் தோற்றத்தில் நாடுகளுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா100-க்கும் மேற்பட்ட நாடுகளை அழைத்து ஜனநாயக மாநாடு நடத்தியதை தொடா்ந்து சீனா அமெரிக்காவை கடுமையாக சினந்துள்ளது.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனநாயகம் என்ற பெயரில் நாடுகளிடையே வெறுப்புணர்வை உண்டாக்குவதும் பிற நாடுகளோடு யுத்தம் செய்வதும் அமெரிக்காவின் கைவந்த கலையாகும்.

இதன் மூலமாக அமெரிக்கா உலகை அழிவுப் பாதைக்குத்தான் அழைத்து செல்கிறது.

அத்தோடு பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக, ஜனநாயகத்தை அமெரிக்கா ஒரு பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

மேலும் ஜனநாயக மாநாட்டை நடத்தியுள்ளதன் மூலம், அந்த அரசியல் முறையை அமெரிக்கா ஒரு கருவியாக்கியுள்ளது எனவும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையில் சா்வதேச ஜனநாயக மாநாடு காணொலி மூலம் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அம் மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி உள்பட உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றினார்கள்.

குறிப்பாக அம் மாநாட்டுக்கு, சீனாவுக்கும் ரஷியாக்கும்  அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதற்கு மாறாக, சீனாவின் ஓா் அங்கமான தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் மூலம், தைவானை ஒரு தனி நாடாக அமெரிக்கா மறைமுகமாக அங்கீகரித்துள்ளதேயென கூறலாம்.

தைவானை அமெரிக்கா அழைத்தது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில்,   நாடுகளுக்கிடையே பகைமை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் எனத் சீனா தெரிவித்துள்ளது.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...