gott
செய்திகள்இலங்கை

தமிழ் மொழியை புறக்கணித்த ஜனாதிபதி!

Share

நாட்டின் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மொழிக் கொள்கையை சமமாக பின்பற்ற வேண்டும்.

இதன் மூலமே நாட்டில் சமத்துவத்தைப் பேண முடியும். வெறும் வாய்வார்த்தை மூலம் வாக்குறுதிகளை வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை.

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு அனுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் ததலைமையகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.

இந்த விளையாட்டரங்கின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி உள்ளடக்கப்படவில்லை.

இதில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே விளையாட்டரங்கின் பெயர் மற்றும் ஏனைய விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து தேசிய மொழிகள் தொடர்பான முன்னாள் அமைச்சர் தனது அதிருப்தியை தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...