gamini
செய்திகள்அரசியல்இலங்கை

மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது! – மின்சக்தி அமைச்சர்

Share

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று மதியம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினையால் நாட்டில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன.

இன்று ஒரு மணிநேரமும், நாளை முதல் இரு மணிநேரமும் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான டொலர்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், மத்திய வங்கி ஆளுநருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மின்சக்தி அமைச்சுக்கு, எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...