முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில பகுதிகள் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளன.
இன்மை நாட்களாக குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதையுண்ட நிலையில் குறித்த உழவு இயந்திரத்தின் பகுதிகள் வெளியே தென்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு கலப்பு பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது அங்கு மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக அவை காணப்படலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் அவை தோண்டி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முல்லை கடற்பரப்பில் நேற்று அதிகாலை தலைக்கீழாக புரண்ட நிலையில் கப்பல் ஒன்றும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews