New legume flour improves blood glucose response to white bread wrbm large
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாணின் விலை மாத்திரம் அதிகரிப்பு!

Share

யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மட்டுமே 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. ஏனைய வெதுப்பகப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று யாழில் பாண் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

கோதுமை மாவின் விலை அதிகரித்தமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 85 ரூபாவாக அதிகரிக்க முடிவு எட்டப்பட்டது.

இதனால், 450 கிராம் எடை கொண்ட ஒரு இறாத்தால் பாணின் விலை 85 ரூபாவாக இருக்கும்.

ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட் களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...