27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு,இதற்கான முன்மொழிவை மின்சார சபை சமர்ப்பித்துள்ள நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காது போனாலும் மின்கட்டணத்தை அதிகரிக்கும் நிலைப்பாட்டில் மின்சார சபை உறுதியாக உள்ளது.

உற்பத்திச் செலவை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மின்கட்டணத்தைக் குறைந்தது 18.3 வீதத்தினால் அதிகரித்தே ஆகவேண்டும் என்று மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.

மின்சக்தியின் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையிலான கட்டண அதிகரிப்பொன்றை மேற்கொள்ளாது போனால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணை வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் பின்னணியிலேயே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...