Maithripala Sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

அரசின் பெரும்பான்மை சு.க கைகளிலேயே! – மைத்திரிபால சிறிசேன

Share

இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பதிலடி கொடுத்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

” தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைத்துவிட்டு, அதன் பிறகு அரசுக்குள் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் என்ன நடக்கும் என்ற பாடத்தை வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருக்கலாம். அதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் அங்கம் வகிக்கின்றனர். எனவே, எம்மால்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்படுகின்றது.

கூட்டணி ஒற்றுமையை காத்து, நட்புடன் நகரவே நாம் விரும்புகின்றோம். எம்மை தாக்க முற்பட்டால், அவர்களின் வழியில் அல்லாமல் வேறு வழியில் பதிலடி கொடுக்க நாமும் தயார்.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...