யாழ்ப்பாணம் – காரைநகர் – கசூரினா கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.
இன்று மாலை 3.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனை தேடும் பணிகள் மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல்போன இளைஞன் கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன் (வயது-17) என்ற மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் பகுதியிலிருந்து காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்ற 20 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கரைக்கு ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றொருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment