missing
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கசூரினா கடலில் நீராடியவர் மாயம்! – தேடுதல் பணி தீவிரம்

Share

யாழ்ப்பாணம் – காரைநகர் – கசூரினா கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

இன்று மாலை 3.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனை தேடும் பணிகள் மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமல்போன இளைஞன் கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன் (வயது-17) என்ற மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியிலிருந்து காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்ற 20 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கரைக்கு ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றொருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...