President Gotabaya Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!- ஜனாதிபதி உறுதி

Share

காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போனோரின் உறவுகளுடனான சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக குறித்த சந்திப்பு தொடர்பான திகதி தீர்மானிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற அமைச்சருடனான சந்திப்பின்போது, காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமது உறவுகள் காணாமல் போன நிலையில், அவர்களது உறவுகள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தேர்வுகளை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...