தமிழர்களின் நகைகளை சரத்பொன்சேகாவே அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்! சிறீதரன் பகிரங்கம்
செய்திகள்இலங்கை

புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! – பொன்சேகா

Share

புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! – பொன்சேகா

முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த, தற்போது அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டுவது வீரம் கிடையாது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களையும், துப்பாக்கிகளை காட்டி மிரட்டுபவர்களையும் அமைச்சுப் பதவியில் வைத்திருந்தால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று எல்லோராலும் விமர்சிக்கப்படுகின்றன, போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளை பார்த்து ஓடி ஒளிந்திருப்பார். அவ்வாறு மரண பயத்திலிருந்த நபர்,

ஆனால் தற்போது நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளை முழந்தாளிட செய்து அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். இது சண்டித்தனமான செயல் அல்ல ,

இவ்வாறான காரியத்தை எந்த தைரியசாலிகளும் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...

images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம்...