mahi scaled
செய்திகள்இலங்கை

சற்று முன்னர் பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு செயலாளர்!

Share

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 2ம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார்.

இதன்போது, அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 பேரைக் கொண்ட அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி உள்ளிட்ட பகுதிளுக்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதன்படி, பிரதமருடனான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாா்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...