mahi scaled
செய்திகள்இலங்கை

சற்று முன்னர் பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு செயலாளர்!

Share

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 2ம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார்.

இதன்போது, அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 பேரைக் கொண்ட அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி உள்ளிட்ட பகுதிளுக்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதன்படி, பிரதமருடனான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாா்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...