gun
செய்திகள்இலங்கை

யாழில் கடமைக்கு இடையூறு! – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Share

யாழ்ப்பாணத்தில் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்து இடையூறு ஏற்பட்டதால் பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்க்க வேண்டி சம்பவம் ஊரெழு பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக் கவசம் இன்றி ஆபத்தான வகையில் பயணித்துள்ளனர்.

அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்று அவர்களுக்குத் தண்டப்பத்திரம் எழுத முற்பட்டபோது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். அவர் பொலிஸாருடன் வரம்பு மீறிச் செயற்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்தனர்.

அத்துடன், அவர்களை எச்சரித்ததாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...