Vithura wikkiramanayakka
செய்திகள்அரசியல்இலங்கை

இந்துக்களின் மரபுரிமைகள் அழிக்கப்படவில்லை- விதுர

Share

இந்துக்களின் மரபுரிமைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களினதும் தொல்லியல் பெறுமதிமிக்க அடையாளங்கள் பாதுக்காக்கப்படும் – என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வவுனியா ஆதிசிவன் கோவில் விவகாரம் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த கோவில் விவகாரம் தொடர்பில் வழக்கு நடைபெற்றுவருகின்றது. எனவே, நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பின்னரே வழிபாட்டுக்கு அனுமதிப்பதா அல்லது என்னசெய்வதென முடிவெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

” இலங்கையில் ஆரம்பகாலகட்டத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளனர். வரலாற்று நூல்களில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பௌத்த அடையாளங்களை வைத்துக்கொண்டு, இது சிங்களவர்களுக்குரியது என ஆக்கிரமிப்பு செய்யக்கூடாதென” சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...