செய்திகள்அரசியல்இலங்கை

நெறிமுறைகளை மீறி செயற்படுகிறது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Share

” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,

” வழமையாக வெளிநாட்டு தூதுவர்களை, அமைச்சர்கள் தமது அமைச்சுக்கு அழைத்தே பேச்சு நடத்துவார்கள். விளக்கம் கோருவார்கள். இதுவே இராஜதந்திர நடைமுறை. ஆனால் இந்த அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தூதுவர்களை நாடி, தூதரகங்களுக்கே சென்று சந்திப்புகளை நடத்துகின்றனர். இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும்.

சீன நிறுவனத்திடமிருந்து உரம் வாங்கிய விவகாரம் இராஜதந்திர நடவடிக்கை அல்ல. நிலைமை இவ்வாறிருக்கையில், இதனை இராஜதந்திர பிரச்சினையாக காண்பிப்பதற்கு அரசு முற்படுகின்றது.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சீனா என்பது எமக்கு மிக முக்கிய நாடு. தடுப்பூசி உட்பட பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளது. உரத்தை மட்டும் அடிப்படையாக வைத்து உறவை கணிக்கமுடியாது. தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாறாக தூதுவர் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...