Harsha de Silva
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அரசே பொறுப்பு! – ஷர்ஷ டி சில்வா

Share

” நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இந்த அரசே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் டொலர் தட்டுப்பாடு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறிவந்தார். அரசில் உள்ள மேலும் சிலரும் இந்த கருத்தையே வெளியிட்டனர். ஆனால் தற்போது டொலரை பெறுவதில் சிக்கல் என கூற ஆரம்பித்துள்ளனர். அரசுக்குள் இருப்பவர்கள் தங்களிடையே பந்துகளை பறிமாறிக்கொள்கின்றனர். மாறாக பிரச்சினைக்கு தீர்வை காண முற்படவில்லை. தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. நாடு வங்குரோத்தடையும் கட்டத்துக்கு வந்துவிட்டது. இதற்கு தற்போதைய அரசு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாம் அரசுக்கு ஆலோசனை வழங்கினோம். அந்த ஆலோசனையையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.” எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...