sajith 7567
செய்திகள்இலங்கை

நாட்டின் எதிர்காலம் பெரும் ஆபத்தில்!! – எதிர்கட்சித் தலைவர் தெரிவிப்பு

Share

நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் எதிர்காலமும். நாட்டின் எதிர்காலமும் ஆபத்தில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) கட்டளை நியதிகள் சட்டம் 27 (2) கீழ் கேள்விப் பத்திரங்களை அரசாங்கத்திடம் முன்வைத்தார், இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய அரசாங்கமானது கல்வியில் உள்ள பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வதில் ஈடுபாடு இல்லாமல் செயற்பட்டு வருகிறது.,

ஒரு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி கிட்டத்தட்ட அதன் கல்வியின் தரத்தைப் பொறுத்தே அமைந்துள்ளது.

இருப்பினும், கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த இணையவழி முறையின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் சமமான கல்வியைப் பெற்றிருக்கும் என்பதில் திருப்திகரமான நிலை இல்லை.

உலகெங்கிலும் உள்ள பிற நாடுகள் கொவிட் நிலைமையை நிர்வகித்தவண்ணம். கல்வி புத்துயிர் பெறுவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளன.

எனினும், பூரணமாக வழங்கப்படாத க.பொ.த சாதாரண தர முடிவுகள், ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்காக இந்த நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பெற்றோர்களும் காலவரையின்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...