Sinopharm
செய்திகள்இலங்கை

சினோபார்ம் செலுத்திய பெண்ணுக்கு கனடாவில் தடை!

Share

திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்ட நிலையில் பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த நிலையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனேடிய அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளைக் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே கனடா உள் நுழைவதற்கு அனுமதித்து வருகின்றது.

இந்த நிலையில் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டதுடன், அனைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்னரே குறித்த பெண் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் அவர் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பைஸர்-பயோஎன்டெக், மொடர்னா, அஸ்ட்ராஜெனகா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய தடுப்பூசிகளை மாத்திரமே கனடா அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...