WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரியை சீண்டினால் விளைவுகள் விபரீதமாகும்!! – தயாசிறி எச்சரிக்கை

Share

“எமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை தொடர்ந்தும் சீண்டினால் விளைவு விபரீதமாக இருக்கும்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

” ஒரு முறை அல்ல, இரு தடவைகள் அல்ல – எமது தலைவரை தொடர்ச்சியாக தாக்கி பேசும் செயலில்தான் மஹிந்தானந்த அளுத்கமகே ஈடுபட்டு வருகின்றார். சேறுபூசும் விதத்தில் போலிக்கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.

அவர் சாக்கடையை கிளறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நன்றாகவே கிளறட்டும், அவ்வாறு கிளறும்போதுதான் குப்பைகள் வெளிவரும்.

நாம் அரச பங்காளிகள். அரசை காக்கவே பாடுபடுகின்றோம். சிலவேளை விமர்சனங்களை முன்வைக்கின்றோம். அது ஜனநாயக உரிமை. தாக்குவதாக இருந்தால் எம்மை தாக்குங்கள். எமது தலைமைமீது கைவைக்க வேண்டாம். எம்மால் பொறுமை காக்க முடியாது.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...