Roshan
செய்திகள்இலங்கை

“கதவு திறந்தே உள்ளது” – மைத்திரி மீது பாயும் இராஜாங்க அமைச்சர்

Share

“அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்யாமல், வெளியேறுங்கள். கதவு திறந்தே உள்ளது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்பு கூறவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாகவும் இருவரும் பொறுப்பு கூறவேண்டும். மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான பொறுப்பையும் இவர்கள் ஏற்க வேண்டும்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க போராடுபவர்கள். அவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. ஆனால் சிலர் உள்ளே இருந்துகொண்டு காலைவாரப் பார்க்கின்றனர். அத்தகையவர்கள் வெளியேறலாம். பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிடுவதுபோல சலூன் கதவு திறந்தே உள்ளது.”- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...