WhatsApp Image 2021 09 20 at 18.40.31 scaled
செய்திகள்இலங்கை

நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்!! – ஹரின் கிண்டல்

Share

பெரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டனர். ஆனால் இங்கு மட்டும்  அரசாங்கம் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவேதடுப்பூசி வழங்கியது. தடுப்பூசி வழங்குவதில் நீடித்த தாமதத்தால் நாடு சீரழிந்துள்ளது.

நாட்டில் இன்று சீனி இல்லை, மா இல்லை, மருந்துகள் இல்லை. குறைந்தபட்சம் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள கழிப்பறைகளும் இல்லை. வாகன உதிரிப்பாகங்கள் இல்லை.

நாட்டுக்குள் கொரோனா வைரஸுடன் பரவியுள்ள மிகப்பெரிய வைரஸுக்கு எதிராக நாங்கள் அணிதிரண்டுள்ளோம். நாட்டில் உள்ள வைரஸ்களை சீரமைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

மத்திய வங்கியிலிருந்து நுழைந்துள்ள வைரஸ், யானைக் கடத்தலில் இருந்து நுழைந்துள்ள வைரஸ் மற்றும் உரங்களிலிருந்து நுழைந்துள்ள வைரஸ் ஆகியவற்றை நாங்கள் கிட்டிய எதிர்காலத்தில் முன்வைக்கிறோம்.

மேற்கூறிய அனைத்து வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தவை. எங்கள் நாட்டின் ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற சகல வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளன.

இந்த வைரஸ்களிலிருந்து நாம் எமது நாட்டை விடுவிக்க வேண்டும். நாட்டு மக்களை முடக்கத்தில் தவிக்கவிட்டு தலைமைகள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றன.

நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லவில்லை. தனது சொந்த ஊருக்கே அவர் சென்றுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...