CVVigneswaran
செய்திகள்இலங்கை

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம்

Share

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால ஒழுங்கு விதிகள் சட்டம் இராணுவ ஆட்சி நோக்கி நாட்டை கொண்டுசெல்ல வாய்ப்புக்கள் உண்டு.

இவ்வாறு தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில்.

நாட்டில், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால ஒழுங்கு விதிகள், நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டுசெல்ல வழியமைக்கக் கூடியவை.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கான நியமனங்கள் இராணுவத்துடன் தொடர்புடையோராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் அஞ்சுகிறோம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது உறவுகளைரத் தேடியும் நீதி கோரியும் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய உளவுப் பிரிவுகளால் மிரட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன,

அண்மையில், வடக்கு மாகாணத்துக்கு சிங்களம் பேசும் பிரதம செயலாளர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

படுகொலைகள் மற்றும் நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது – என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...