gl7
செய்திகள்அரசியல்இலங்கை

பட்ஜெட் கூட்டத்தொடரிற்குப் பின்னர் இடம்பெறவுள்ள மாற்றம்!

Share

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவின் பணிகள் முடிவடைந்த பின்னர், சட்டமூலம் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்படும். அதன்பின்னரே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இவ்வருடத்துக்குள் அப்பணிகள் நிறைவுபெறும்.

அதன்பின்னர் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி முதல்வாரத்தில் இருந்து புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான தினேஷ் குணவர்தன குழுவின் அறிக்கையும் ஜனவரியில் சபையில் முன்வைக்கப்படும். புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு இதுவும் பக்கபலமாக அமையும்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...