Susil Premajayantha
செய்திகள்அரசியல்இலங்கை

மக்களின் வாழ்க்கை சுமையை வர்த்தமானி வெளியிடுவதால் தீர்க்க முடியாது!

Share

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொது மக்கள் பாரிய இன்னலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திலேயே அவர் இது இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,  நாட்டில் நிலவும் காலநிலை, உரம் மற்றும் களைநாசினி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ எவரும் புறக்கணிக்க முடியாது.

வர்த்தமானிகளை வெளியிடுவதன் மூலம் மாத்திரம் தீர்வுகளை வழங்க முடியாது.

பல நிறுவனங்கள் விலையை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் பராமரிப்பதற்கு பொறுப்பாக இருப்பதாகவும், எனவே அத்தகைய பிரிவுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பொறுப்பான நபர்களுடன் கலந்துரையாடி அத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்படாததால் பல வர்த்தமானிகளை வெளியிட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டது.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மக்களின் சுமையை குறைக்க பொருத்தமான பொருளாதார மாதிரியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...