31.08 4 e1630403103918
செய்திகள்இலங்கை

ஆட்டுக் கொட்டகை இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி!!

Share

வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தந்தை தமது ஆடுகளை கொட்டகையில் கட்டிக்கொண்டிருந்தபோது, சிமெந்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையின் சுவருக்கருகில் ஒன்றரை வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

31.08 6 711x400 1

இதன்போது ஆடு மிரண்டு கொட்டகையின் சுவர்களை இடித்தபோது, சுவர் இடிந்து ஒன்றரை வயது சிறுவனுக்கு மேல் விழுந்ததுள்ளது.

இதையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...