31.08 4 e1630403103918
செய்திகள்இலங்கை

ஆட்டுக் கொட்டகை இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி!!

Share

வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தந்தை தமது ஆடுகளை கொட்டகையில் கட்டிக்கொண்டிருந்தபோது, சிமெந்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையின் சுவருக்கருகில் ஒன்றரை வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

31.08 6 711x400 1

இதன்போது ஆடு மிரண்டு கொட்டகையின் சுவர்களை இடித்தபோது, சுவர் இடிந்து ஒன்றரை வயது சிறுவனுக்கு மேல் விழுந்ததுள்ளது.

இதையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...