172037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரை ஒதுங்கிய படகு- மாயமான மீனவர்!!

Share

மட்டக்களப்பு முகத்துவாரம்  பகுதியில் செட்டிபாளையம் கடல் கரையில் படகொன்று  கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் விசாரணையின்போது நேற்று(23) இரவு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் படகே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது தெரியவருகிறது. குறித்த படகு கவிழ்ந்ததிலேயே இந்நபர் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளார்.

மட்டக்களப்பு திரைமடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த மீனவர் நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ந்ததை அடுத்து அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார் எனத் தெரியவருகிறது..

காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...