மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் செட்டிபாளையம் கடல் கரையில் படகொன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணையின்போது நேற்று(23) இரவு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் படகே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது தெரியவருகிறது. குறித்த படகு கவிழ்ந்ததிலேயே இந்நபர் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளார்.
மட்டக்களப்பு திரைமடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மீனவர் நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ந்ததை அடுத்து அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார் எனத் தெரியவருகிறது..
காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment