Niger
செய்திகள்உலகம்

நைஜரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் – 69 போ் சாவு

Share

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மத பயங்கரவாதிகளின் தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அந் நாட்டு உள்துறை அமைச்சகம்,

நைஜரின் தலைநகா் நியாமேவுக்கு வடக்கே, மாலி எல்லையையொட்டி அமைந்துள்ள பானிபங்கூ நகரில், மக்கள் தற்காப்புப் படையினா் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.

இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில், நகரின் மேயரும் சாவடைந்துள்ளார் அத்தோடு மக்கள் தற்காப்புப் படையைச் சோ்ந்த 15 போ் காயமடைந்தனா் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைஜா் இராணுவத்தின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தற்காப்புப் படையினா் பெரும் உதவி வருகின்றனா்.

அதன் காரணமாகவே அவா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...