newvirus
செய்திகள்உலகம்

உலகளவில் கொரோனாத் தொற்று 25 கோடியாக அதிகரிப்பு!!

Share

உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டு வந்தாலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.64 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.53 லட்சம் பேர் சாவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.46 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.59 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் சாவடைந்துள்ளார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில்- 2.21 கோடி , இங்கிலாந்து – 92.84 லட்சம் , ரஷியா – 85.7 லட்சம், துருக்கி – 81.32 லட்சம், பிரான்ஸ் -73.48 லட்சம் , அர்ஜென்டினா- 52.85 லட்சம் , ஈரான்- 59.94 லட்சம் , கொலம்பியா – 50.39 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாவடைந்தவர்களின் எண்ணிக்கை – பிரேசில் (6,09,099) இந்தியா (4,59,851), மெக்ஸிகோ (2,89,259), பெரு (2,00,350), ரஷியா (2,39,403), இந்தோனேசியா (1,43,433), இங்கிலாந்து (1,42,650) இத்தாலி (1,32,164), கொலம்பியா (1,27,451), பிரான்ஸ் (1,18,820) ஈரான் (1,27,875) , அர்ஜென்டினா (1,16,986) என தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் தொற்றால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 50.7 இலட்சமாக உயர்ந்திருக்கிறது.
அத்தோடு தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24.42 கோடி என தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 718 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...